
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டைதாரர்களுக்கான சிறப்பு பயோமெட்ரிக் முகாம் நாளை ஆகஸ்ட் 2-ஆம் தேதி நடைபெறுகிறது.
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், கைரேகை அல்லது கண்கருவிழி பதிவு செய்யாதவர்கள் பங்கேற்கலாம்.
வெளியூர் அல்லது வெளி மாவட்டங்களில் வசிப்பவர்கள், தற்போது வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள ரேஷன் கடைகளிலும் இந்த பதிவை மேற்கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.