
கடந்த 13 நாட்களாக நீடித்த அமெரிக்கா - ஈரான் இடையிலான தாக்குதலை டிரம்ப் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
போர் பதற்றத்தால் பீப்பாய் 92 டாலராக உயர்ந்திருந்த பிரென்ட் கச்சா எண்ணெய் விலை, தற்போது 5 டாலர்கள் சரிந்து 88.03 டாலர்களுக்கு விற்பனையாகிறது.
புதிய தாக்குதலுக்கான திட்டங்கள் தயாராக இருந்தபோதிலும், தற்போதைய சூழலில் போர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் உலகளாவிய வர்த்தக பாதிப்புகள் தற்காலிகமாகத் தணிந்துள்ளன.