
நைஜீரியாவில் இந்த ஆண்டு பிப்ரவரி மாத தொடக்கத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 308 பொதுமக்களை அந்நாட்டு ராணுவம் அதிரடியாக மீட்டுள்ளது.
நைஜர் மற்றும் குவாரா மாகாண கிராமங்களுக்குள் புகுந்து கடத்தப்பட்ட இந்த மக்கள், நைஜர் மாகாணத்தின் கனிஜி லேக் தேசிய பூங்கா வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டனர்.
பணத்திற்காக பொதுமக்களையும் பள்ளி குழந்தைகளையும் கடத்தும் போகோ ஹராம் மற்றும் ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக ராணுவம் இந்த தேடுதல் வேட்டையை நடத்தியது.