
திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதூரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு நாறும்பூநாதன் என்பவர் ஆயிரக்கணக்கான மரங்களைக் கொண்ட காட்டை உருவாக்கியுள்ளார்.
மணல் கொள்ளையைத் தடுக்க உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் ஆலோசனையின்படி, வனத்துறை உதவியுடன் 1,000 மரக்கன்றுகள் நட்டு இந்த பசுமைப் பயணம் தொடங்கப்பட்டது.
தொடர்ச்சியான தீ விபத்துகள் மற்றும் எதிர்ப்புகளைக் கடந்து, நீர்மருது, தேக்கு, வேங்கை, நாவல் உள்ளிட்ட பல்வேறு வகையான மரங்களை வளர்த்து அவர் சாதனை படைத்துள்ளார்.