
கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு நடந்ததாகக் கூறி, 6 வாக்குச்சாவடிகளில் வி.வி.பேட் எந்திரங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் தரப்பு வாதிட்டது.
வாக்குப்பதிவு எந்திரங்களைச் சரிபார்ப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்த வழக்கை திரும்பப் பெற்று, புதிய மனு தாக்கல் செய்ய மு.க.ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.