
ஈரான் மீது திட்டமிடப்பட்டிருந்த பெரிய தாக்குதலை அமெரிக்கா ஒத்திவைத்ததற்கு அதன் பாதுகாப்பு ஆயுத கையிருப்பு வேகமாக குறைந்து வருவது முக்கிய காரணம் என்று சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது.
சிஎஸ்ஐஎஸ் (CSIS) மதிப்பீட்டின்படி, போர் தொடங்குவதற்கு முன்பு அமெரிக்காவிடம் சுமார் 2,200 பேட்ரியாட் (Patriot) ஏவுகணைகளும், 452 தாட் (THAAD) ஏவுகணைகளும் கையிருப்பில் இருந்தன.
அமெரிக்காவிடம் போதுமான ஆயுதங்கள் இருப்பதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் அன்னா கெல்லி இந்தத் தகவலை மறுத்துள்ளதோடு, ஆயுத உற்பத்தியை அதிகரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறினார்.