
சுங்க கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும் ஈ.ஆர். ஈஸ்வரன் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.
நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதிகளில் லாரி தொழில் கடும் சிரமத்தில் உள்ளதால், சுங்க கட்டண உயர்வு தொழிலை முடக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
60 கிலோ மீட்டருக்கும் குறைவான இடைவெளியில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.