
ஆகஸ்ட் 28-ம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 11.47 பில்லியன் டாலர் அதிகரித்து, 740.80 பில்லியன் டாலர் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பு 2.191 பில்லியன் டாலர் உயர்ந்து, தற்போது 116.409 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
சர்வதேச நிதியத்தில் உள்ள இந்தியாவின் பங்களிப்பு 11 மில்லியன் டாலர் சரிந்து, 4.914 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிக்கை கூறுகிறது.