
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி மீதான சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில், அவரை மீண்டும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.256.44 கோடி மதிப்பிலான பணப்பரிவர்த்தனை வழக்கில், தயாநிதி ஐபிஎல் போட்டியை நேரில் பார்த்தது மற்றும் தேர்தலில் வாக்களித்ததைச் சுட்டிக்காட்டி அமலாக்கத் துறை இந்த கோரிக்கையை முன்வைத்தது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் இயக்குநர், மனநல மருத்துவர், கிளினிக்கல் சைக்காலஜிஸ்ட் மற்றும் நரம்பியல் வல்லுநர் அடங்கிய குழு தயாநிதியின் உடல் தகுதியை ஆய்வு செய்து சீலிடப்பட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.