
ஆந்த்ரோபிக் ஏஐ நிறுவனத்திலிருந்து விலகிய ஆராய்ச்சியாளர் ஜேக்கப் காக்ஸன், நிறுவனங்கள் உருவாக்கி வரும் 'சூப்பர்இன்டெலிஜென்ஸ்' தொழில்நுட்பத்தால் 2030-க்குள் மனிதகுலம் அழியும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளார்.
ஓப்பன்ஏஐ மற்றும் ஆந்த்ரோபிக் ஆகிய நிறுவனங்கள் மனிதக் கட்டுப்பாட்டைத் தாண்டி தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ளும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் பொறுப்பற்ற முறையில் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஏஐ நிறுவனங்களின் நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் இந்த அபாயத்தைப் பற்றி பயப்படுவதாகவும், ஆனால் சந்தைப்போட்டியில் சிக்கி அதை மறைப்பதாகவும் அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.