
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றிய என்.சந்திரசேகரன், அடுத்த பதவிக்கால போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்துள்ளார்.
இவரது தலைமையின் கீழ் டாடா குழுமத்தின் வருமானம் ரூ.6 லட்சம் கோடியிலிருந்து ரூ.16 லட்சம் கோடியாகவும், லாபம் ரூ.1.7 லட்சம் கோடியாகவும் உயர்ந்துள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தைப் பங்குச்சந்தையில் பட்டியலிடும் விவகாரத்தில் நோயல் டாடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே இவரது விலகலுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.