
வடகடலோர தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 14-ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை வாய்ப்பு இருந்தாலும், வரும் 13-ம் தேதி வரை தமிழகத்தின் வட மாவட்டங்களில் வெப்பநிலை சற்று உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.