
கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் ஏற்பட்ட விபத்துகளில், கடந்த நான்கு நாட்களில் பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ள நிலையில், 418 நிவாரண முகாம்களில் 18,434 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நிலச்சரிவு அபாயம் உள்ள வயநாடு மாவட்டத்தில் உஷார் நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, கோழிக்கோடு - வயநாடு மற்றும் கண்ணூர் - வயநாடு மலைப்பாதைகளில் இரவு நேர பயணத்திற்கு கலெக்டர் மேகஸ்ரீ கட்டுப்பாடு விதித்துள்ளார்.