
மும்பையில் வசிக்கும் நடிகை கீர்த்தி குல்ஹாரியின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் ரூ.2.44 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
ஏரோமெக்சிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு நான்கு தனித்தனி பரிவர்த்தனைகள் மூலம் 2,525 அமெரிக்க டாலர்கள் திருடப்பட்டுள்ளதாக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
தகவல் திருட்டு குறித்து கீர்த்தி குல்ஹாரி அளித்த புகாரின் பேரில் சைபர் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.