
திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் காவிரி விவகார ஆர்ப்பாட்டத்தில் பேசியதற்காக, தவெக அரசு 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
புகார் அளிக்கப்பட்ட 2 மணி நேரத்தில் காலை 11 மணிக்கெல்லாம் உதயநிதியை கைது செய்த காவல்துறை, தன் மீது அவதூறு பரப்பிய தவெக ஆதரவாளர்களை நீதிமன்ற உத்தரவு இருந்தும் கைது செய்யாமல் காப்பாற்றுவது ஏன் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருவைகுண்டம் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் மீது பாலியல் புகார்கள் இருந்தும் நடவடிக்கை எடுக்காத தவெக அரசு, அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுவதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.