
15 வயதான வைபவ் சூர்யவன்ஷி துலீப் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வருவதால், அவரை உலக கிரிக்கெட்டின் எதிர்கால சொத்து என முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் பாராட்டியுள்ளார்.
அரைஇறுதிப் போட்டியில் சூர்யவன்ஷியின் பேட்டிங் பிரமாதமாக இருந்ததாகவும், அவரைச் சரியாக வழிநடத்தினால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சூப்பர் ஸ்டாராக உருவெடுப்பார் என்றும் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
சூர்யவன்ஷியின் திறமை மீது சிலர் சந்தேகம் எழுப்புவது தேவையற்றது என்றும், அவர் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆதிக்கம் செலுத்துவார் என்றும் அவர் தனது யூடியூப் சேனலில் கூறியுள்ளார்.