காமன்வெல்த் ஆண்கள் குத்துச்சண்டை 55 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில், இந்திய வீரர் ஜடுமானி சிங் ஆஸ்திரேலியாவின் ஜை டிக்சனிடம் போராடி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
முதல் சுற்றில் 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற ஜடுமானி சிங், அடுத்த இரண்டு சுற்றுகளில் டிக்சனின் ஆதிக்கத்தால் நடுவர்களின் ஒருமித்த முடிவின்படி தோல்வியடைந்தார்.
இந்தத் தொடரில் குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவுக்குக் கிடைத்த மூன்றாவது பதக்கம் இதுவாகும்.