
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
ஓமந்தூரார் வளாகத்தில் தொடங்கிய இந்தப் பேரணி, வாலாஜா சாலை வழியாக மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை சென்றடைந்தது.
நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக வலைதளத்தில் கருணாநிதியின் பொது வாழ்க்கை மற்றும் சாதனைகளை நினைவு கூர்ந்தார்.