
பஹாமாஸில் சுற்றுலா முடித்துவிட்டு புளோரிடா நோக்கிச் சென்ற சிறிய ரக தனி விமானம் நடுக்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
40 ஆண்டுகள் விமானத்தை இயக்கிய அனுபவம் பெற்ற மரியோ லமர் (80) இயக்கிய இந்த விமானத்தில் அவரது மனைவி மற்றும் இரண்டு பேரப்பிள்ளைகள் பயணம் செய்தனர்.
மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்ட நிலையில், தீவிர தேடுதலுக்குப் பின் விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன.