
நாட்டின் 140 கோடி மக்களின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்வதில் இந்தியா உறுதியுடன் உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ரஷ்யா மற்றும் ஈரான் மீது தடைகள் விதிக்கும் மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டுள்ளதன் மூலம் சீனா, இந்தியா உள்ளிட்ட முதல் 5 நாடுகள் மீது 100% வரை சுங்க வரி விதிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யா மட்டும் 51.1 சதவீதத்தை வழங்கியுள்ளது.