
சேலம் அருகே அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கியிருந்த 14 வயதுடைய இரு மாணவியரை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக துப்புரவு பணியாளர் ராதிகா (40) கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதிக்கு வெளியே அழைத்துச் சென்று ரகுபதி (37) என்பவருடன் பழக வைத்து, மாணவியருக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக இந்த கொடுமை தொடர்ந்து வந்த நிலையில், ரகுபதியை போலீசார் தேடி வருகின்றனர்; கொண்டலாம்பட்டியில் நடந்த மற்றொரு பாலியல் சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.