Health & Environment
கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

கேரளாவின் 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

Dinamalar1h
THE BRIEF
1

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், 8 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

2

பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மழையளவு 100 மில்லி மீட்டரை கடந்துள்ளது.

3

ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டு, ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.