
இந்தியாவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக, வீடுகள் பட்டியல் மற்றும் வசதிகள் குறித்த களப்பணி இன்று ஆகஸ்ட் 1 முதல் தொடங்குகிறது.
தமிழகம் முழுவதும் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் நேரில் சென்று 33 கேள்விகள் கொண்ட கேள்வித்தாளைப் பயன்படுத்தி ஆகஸ்ட் 30 வரை தரவுகளைச் சேகரிப்பார்கள்.
கடந்த ஜூலை 31 வரை நடைபெற்ற சுய கணக்கெடுப்பு பணியில் தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இணையதளம் வழியாக விவரங்களைச் சமர்ப்பித்துள்ளனர்.