
நடிகை ஜான்வி கபூர் தனது ஆளுமை உரிமைகளைப் பாதுகாக்க டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக் காணொலிகளை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜான்வி கபூரின் வழக்கறிஞர் சுமார் 4 ஆயிரம் ரசிகர் பக்கங்களை முடக்கக் கோரிய மனுவை நிராகரித்த நீதிபதி, விமர்சனங்களும் கேரிகேச்சர்களும் பொது வாழ்க்கையின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டார்.
சமூக வலைதளங்களில் முறையற்ற வணிக நோக்கத்திற்காக நடிகையின் உருவத்தைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது என்றாலும், நியாயமான ரசிகர் பக்கங்களை முடக்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.