
தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் அரசுப் பள்ளியில் சக மாணவர்களால் சித்ரவதைக்கு உள்ளான எட்டாம் வகுப்பு மாணவர் அளித்த புகாரின் பேரில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு முதல் மாணவனின் பிறப்புறுப்பை பிடித்து இழுத்தல் மற்றும் எரிச்சல் தரும் பொடியைத் தூவுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டதாக 14 வயதுடைய மாணவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்படும் பள்ளி தலைமை ஆசிரியர் சிவ அருணா மற்றும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை கோரப்பட்டுள்ளது.