
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கின் போது சம்ஸ்கிருத மந்திரங்களுக்கு இணையாக தமிழ் மந்திரங்களை ஓத உத்தரவிடக் கோரிய மனுக்களை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சட்டத்தை நீதிமன்றத்தால் உருவாக்க முடியாது என்றும், அரசுதான் கொள்கை முடிவுகளை எடுக்க முடியும் என்றும் நீதிபதி சி.சரவணன் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 17-ம் தேதி நடைபெறவுள்ள குடமுழுக்கு விழாவில் வழக்கம்போல சம்ஸ்கிருதம் மற்றும் தமிழ் மந்திரங்கள் ஓதப்படும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.