
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹானூர் அருகே காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் ஆகஸ்ட் 15 அன்று கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உயிரிழந்தவர்களிடம் 34.5 கிலோ வனவிலங்கு இறைச்சி கைப்பற்றப்பட்டதாக வனத்துறை விளக்கம் அளித்துள்ள நிலையில், காணாமல் போன கால்நடைகளைத் தேடியே அவர்கள் சென்றதாகக் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாகக் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதி விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் இச்சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.