
இந்தியாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் வைத்திருக்கும் தனிநபர்கள், இரண்டு வீடுகள் வரை மட்டுமே சொந்தப் பயன்பாட்டிற்கான வீடாக அறிவிக்க அனுமதிக்கப்படுகிறது.
இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகளை வைத்திருந்து, அவற்றை வாடகைக்கு விடாமல் காலியாக வைத்திருந்தாலும், மூன்றாவது வீடு 'கருதப்படும் வாடகை வீடு' என்ற கணக்கில் சேர்க்கப்பட்டு வரி விதிக்கப்படும்.
இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகள் மூலம் வருமானம் அல்லது இழப்பு உள்ளவர்கள் ஐடிஆர்-2 படிவத்தையே கட்டாயம் தேர்வு செய்து தாக்கல் செய்ய வேண்டும்.