
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) என்பது மோசடிகளைக் கண்டறியவும் அதேசமயம் மோசடிகளைச் செய்யவும் உதவும் ஒரு இருமுனை வாள் போன்றது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய ரிசர்வ் வங்கி தனது டிஜிட்டல் ரூபாய் கட்டமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்பத்தின் அபாயங்களைக் கட்டுப்படுத்தும் அதேவேளையில் புதுமைகளைப் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.