
ஈரான் பயங்கரவாதத்தை ஆதரிக்கவும், இராணுவத் திறன்களை மேம்படுத்தவும் பயன்படுத்தியதாகக் கூறப்படும் நாணயப் பரிமாற்ற நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது.
துபாயைத் தளமாகக் கொண்ட ஷெல்பிட் கிரிப்டோகரன்சி நிறுவனம் மற்றும் அதன் நிறுவனர் சியாவாஷ் கைவன்பூர் மீது சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்காக அமெரிக்க திறைசேரி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஈரானின் அபான் டெதர் டிஜிட்டல் சொத்து பரிமாற்ற நிறுவனம் மீதும், ஈரானிய வங்கிகளுக்கு உதவிய துபாய் நிறுவனங்கள் மீதும் இந்தத் தடைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.