
ஜப்பானின் சிபா மாகாணத்தில் உள்ள இச்சிகாவா நகர மிருகக்காட்சி சாலையில் பிறந்த 'பஞ்ச்' குரங்கு தனது முதல் பிறந்தநாளை நேற்று கொண்டாடியது.
பஞ்ச் தனது தாயால் கைவிடப்பட்டு, ஆரஞ்சு நிற ஒராங்குட்டான் பஞ்சுப் பொம்மையுடன் தனிமையில் வாடிய கதை இணையத்தில் வைரலாகி உலகளவில் பிரபலமானது.
அமெரிக்கா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 2,500 பிறந்தநாள் வாழ்த்து அட்டைகளை பஞ்ச் பெற்றுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் தலைவர் தகாஷி யசுனாகா தெரிவித்துள்ளார்.