
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் சமரசம் ஏற்பட்ட நிலையில், இனி சீமானுக்காக உறுதியாக பேசுவேன் என நடிகை விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
தன்னை கொச்சைப்படுத்துபவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ வெளியிட்டுள்ள விஜயலட்சுமி, தன்னை பணம் கொடுத்து யாராலும் விலைக்கு வாங்க முடியாது என கூறியுள்ளார்.
விஜயலட்சுமியின் இந்த விமர்சனம் தவெகவினரை குறிவைத்தே இருப்பதாக சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.