
இயக்குநர் அருண்ராஜா காமராஜுடன் இணைந்து தயாரித்து நடிக்கவிருந்த படத்தை, கிரியேட்டிவ் கருத்து வேறுபாடு மற்றும் பட்ஜெட் சிக்கல்கள் காரணமாகக் கைவிடுவதாக விஷ்ணு விஷால் அறிவித்துள்ளார்.
கடந்த 10 மாதங்களாகப் படத்திற்காகத் தயாராகி வந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள விஷ்ணு விஷால், இயக்குநரின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தற்போது விஷ்ணு விஷால் தனது அடுத்த வெளியீடான 'இரண்டு வானம்' மற்றும் தனது சகோதரரின் 'Yellow Yellow Dirty Fellow' படங்களின் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.