
தமிழக வேளாண் பட்ஜெட்டில் 5 கோடி விவசாயிகளுக்கு வெறும் ரூ.14,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது மிகக் குறைவானது என சவுமியா அன்புமணி சட்டப்பேரவையில் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 42,000 ஏரிகளில் தற்போது 27,000 ஏரிகள் மட்டுமே உள்ள நிலையில், அவற்றை முறையாகத் தூர்வாரினால் 150 டிஎம்சி தண்ணீரைச் சேமிக்க முடியும் என அவர் வலியுறுத்தினார்.
காவிரி உபரிநீர் திட்டத்தை தருமபுரி மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டும் என்றும், விவசாயிகளின் கூட்டுறவு கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.