
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வு ஆகஸ்ட் 4 முதல் 17 வரை நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 13 முதல் 22 வரை நடைபெறும் என்றும், மாணவர்கள் ஆகஸ்ட் 29-க்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு 72,627 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், மாநிலத்தில் மொத்தம் 16,199 மருத்துவ இடங்கள் உள்ளதாக தேசிய மருத்துவ மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.