
இந்தியாவில் முதன்முறையாக லக்னோ-டில்லி இடையேயான தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில், 'ஸ்ப்ரைட்' என்ற தனியார் பிராண்ட் பெயரில் இயக்கப்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
கோகோ கோலா நிறுவனம் 6 மாத கால விளம்பர உரிமத்தைப் பெற்றுள்ள நிலையில், ரயிலின் 5 எல்.எச்.பி பெட்டிகள் ஸ்ப்ரைட் விளம்பர வடிவமைப்புடன் மாற்றப்பட்டுள்ளன.
தனியார் பிராண்டிங் செய்யப்பட்டாலும், இந்த ரயில் ஐஆர்சிடிசி மூலம் இயக்கப்பட்டு, ரயில்வே உள்கட்டமைப்புக்கான கட்டணங்களை இந்திய ரயில்வேக்குச் செலுத்துகிறது.