
இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவின் 75-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 22-ம் தேதி சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டி20 போட்டி நடைபெறுகிறது.
ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் உள்ள இந்திய அணியை, 41-வது இடத்தில் உள்ள ஜப்பான் அணி எதிர்கொள்கிறது, இது ஜப்பான் அணி முழுநேர ஐசிசி உறுப்பினர் நாட்டுடன் விளையாடும் முதல் போட்டியாகும்.
30 வயதான கென்டல் கடோவாக்கி ஃபிளெமிங் தலைமையில் 15 பேர் கொண்ட ஜப்பான் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற அதே வீரர்கள் இந்த அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.