
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இந்த மாதம் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ரூ.75,69,761 ரொக்கம் வசூலாகியுள்ளது.
ரொக்கத்துடன் கூடுதலாக 34.100 கிராம் தங்கம், 458.900 கிராம் வெள்ளி மற்றும் 198 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாகக் கிடைத்துள்ளன.
தற்போது கோவிலில் நம்பெருமாள் பவித்ரோற்சவம் நடைபெற்று வரும் நிலையில், சுவாமி நம்பெருமாள் பவித்ரோற்சவ மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.