
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தமிழகத்தின் 22 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
வளிமண்டல சுழற்சி காரணமாக மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 9 முதல் 13 வரை வட உள் தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 2-3° செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.