
நடிகர் தனுஷ், தனது 2 மகன்களுடன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார்.
கோவிலில் நடைபெற்ற கோ பூஜையில் கலந்துகொண்டு பசுவுக்கு அகத்திக்கீரை வழங்கிய அவர், எதாஸ்தானம் யாக பூஜையிலும் பங்கேற்றார்.
தனுஷுடன் செல்பி எடுக்க பக்தர்கள் மற்றும் கோவில் ஊழியர்கள் ஆர்வம் காட்டியதால் கோவில் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.