
இந்தியாவில் 2028-ம் ஆண்டிற்குள் பேட்டரி மூலம் இயங்கும் மின்சார வான்வழி டாக்சி சேவையைத் தொடங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
சர்லா ஏவியேஷன் நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் இதற்கான சோதனைகளைத் தொடங்க உள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.
இந்த ஏர் டாக்சிகள் ஒரு விமானியுடன் ஆறு பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் ஏழு மின்சார மோட்டார்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு வருகின்றன.