
பெரு நாட்டின் பிஸ்கோ பகுதியில் இருந்து நாஸ்கா லைன்ஸ் பகுதிக்குச் சென்ற சிறிய ரக சுற்றுலா விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்தது.
இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 11 பயணிகள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 13 பேர் உயிரிழந்ததாக காவல் துறை அதிகாரி ஜார்ஜ் ஆண்டிரேட் தெரிவித்தார்.
தொல்லியல் ஆய்வு பணிக்காகச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.