
கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு தூய்மைப் பணியாளர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 4-வது நாளாகத் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம், வார விடுமுறை சம்பளம் மற்றும் ஈஎஸ்ஐ, பிஎஃப் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனப் பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டமன்ற மானியக் கோரிக்கையின் போது எந்த அறிவிப்பும் வெளியாகாதது மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் பலன் கிடைக்காதது குறித்து பணியாளர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.