
வரும் 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மற்றும் பிளாஸ்டிக் கலவையற்ற களிமண் சிலைகளை மட்டுமே கரைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சிலைகளை அலங்கரிக்க இயற்கை பிசின்கள் மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என்றும், அனுமதி இல்லாத நீர்நிலைகளை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.