
பழனி மடத்திற்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை ரூ.2 கோடிக்கு மோசடி செய்த வழக்கில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் பத்திர எழுத்தாளர் ஜெயபிரகாஷ் ஆகியோரின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தள்ளுபடி செய்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற 4 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு ஆகஸ்ட் 12-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.