
பிரணவ் ஜூவல்லரி மோசடி வழக்கில் கைப்பற்றப்பட்ட 1558.270 கிராம் தங்க நகைகள் மற்றும் 15,000.332 கிராம் வெள்ளிப் பொருட்களை ஏலம் விடுவதற்கான அறிவிப்பை திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ளனர்.
ஆகஸ்டு 6, 2026 அன்று நடைபெறும் இந்த ஏலத்தில், தங்க நகைகளின் குறைந்தபட்ச மதிப்பு ரூ.1,63,46,930 மற்றும் வெள்ளிப் பொருட்களின் மதிப்பு ரூ.19,86,658 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி பதிவு செய்யப்பட்ட இந்த மோசடி வழக்கில், இதுவரை 2,200-க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு, 24 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.