
பிரிட்டனில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, அரிசி கழுவுவதை குறைப்பது மற்றும் தொழுகைக்கு முந்தைய 'உது' சடங்கில் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்த விழிப்புணர்வு பிரசாரத்திற்காக பிரிட்டன் அரசு அமைப்பான 'ஆப்வாட்' 3.5 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.
குழாய் கசிவுகள் மூலம் தினமும் 300 கோடி லிட்டர் தண்ணீர் வீணாகும் நிலையில், பொதுமக்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.