
சவுதி அரேபியாவில் ரியாத் மற்றும் மதினா பிராந்தியங்களில் அமைந்துள்ள பைப்லைனின் இறைப்பி நிலையங்கள் ட்ரோன்கள் மூலம் தாக்கப்பட்டதை அடுத்து அது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சுமார் 1,200 கி.மீ நீளம் கொண்ட இந்த பைப்லைன் நாளொன்றுக்கு 40 முதல் 50 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்யைக் கொண்டு செல்லும் திறன் கொண்டது.
இந்த பைப்லைன் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து உலகச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலரைத் தாண்டி உயர்ந்துள்ளது.