
தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் 17 மாவட்டங்களை உள்ளடக்கிய 5 பல்வழிப்பாதை ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.10,021 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டங்கள் மூலம் ரயில்வேயின் பாதை வலைப்பமைப்பில் கூடுதலாக 540 கி.மீ. தூரம் இணைக்கப்படும்.
2029-30-ம் ஆண்டுக்குள் நிறைவு செய்யப்படவுள்ள இந்தத் திட்டங்கள், ஆண்டுக்கு கூடுதலாக 4.7 கோடி டன் சரக்கு போக்குவரத்தை கையாளவும் 2,121 கிராமங்களுக்கு ரயில் இணைப்பை மேம்படுத்தவும் உதவும்.