
சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கையை அறிமுகப்படுத்துவதால் மாணவர்களுக்கு எவ்வித அழுத்தமும் ஏற்படக் கூடாது என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு வியாழக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, 10-ஆம் வகுப்பில் மூன்றாவது மொழிக்கு பொதுத் தேர்வு நடத்தப்படாது என்ற சிபிஎஸ்இ-யின் சுற்றறிக்கை மீதான மனுக்களை விசாரித்தது.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பட்டீ, நாட்டில் உள்ள மொத்த பள்ளிகளில் சிபிஎஸ்இ பள்ளிகள் 4.45 சதவீதம் மட்டுமே உள்ளன என்று நீதிமன்றத்தில் வாதிட்டார்.